இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல் 2025.. பிளே ஆப்க்கு செல்லப்போகும் 4 அணி எது?

Advertisements

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் 15 போட்டிகள் தான் எஞ்சி இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த சூழலில் ஆர்ச பி முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், மும்பை மூன்றாம் இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய மூன்று அணிகளும் போட்டி போடுகின்றன.

இது தொடர்பாக கணிப்பை வெளியிட்டுள்ள முன்னாள் வீரர்  அணில் கும்ப்ளே,மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அல்லது குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று சொல்லப்படுகிறது. இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கையிப் வெளியிட்டுள்ள கணிப்பில், ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என தெரிவித்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *