மதிமுக பொதுச் செயலாளாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

Advertisements

மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்து அடிபட்டதாக கூறப்படும் நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் வைகோ திருநெல்வேலி சென்றிருந்த போது அவர் தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியே ஏறாமல் அருகில் இருந்த திண்ணை வழியே ஏற முயன்று தடுமாறி கிழே விழுந்தார். இதனால் இடது தோள் பட்டையில் காயம் ஏறப்ட்டதோடு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

முதற்கட்ட சிகிச்சையை நெல்லையில் மேற்கொண்ட அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு உடனடியாக பொது வாழ்வில் கவனம் செலுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *