
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.இப்படம் வெளியாகி ஐந்து நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் இப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றி தற்போது பிரபல திரையரங்க உரிமையாளர் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில படங்கள் சூர்யாவிற்கு எதிர்பார்த்த வெற்றியினை பெற்று தரவில்லை. எனவே ரெட்ரோ திரைப்படத்தை தான் அவரது ரசிகர்கள் மலைபோல நம்பி இருந்தனர். அந்த வகையில் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்ததா ? என்பது தான் கேள்வியாக உள்ளது. கண்டிப்பாக ரெட்ரோ சூர்யாவிற்கு ஒரு ஹிட் படமாகவே அமைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. பெரும்பாலான ரசிகர்களுக்கு ரெட்ரோ படம் பிடித்துள்ளது.
மேலும் சூர்யா ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தமாக ரெட்ரோ சூர்யாவிற்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையில் வெளியானது.
ரெட்ரோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன் காரணமாக இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக அமைந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ரெட்ரோ திரைப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. என்னதான் ஒரு சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களுக்கு ரெட்ரோ பிடித்த படமாகவே உள்ளது.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரெட்ரோ திரைப்படம் 17 கோடி வரை வசூலித்தது. உலகளவில் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் 46 கோடி வரை வசூலித்தது. இதை படக்குழு அதிகாரபூர்வமாகவே அறிவித்தது.இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் ரெட்ரோ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். , ரெட்ரோ திரைப்படம் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 44 கோடி வசூலித்ததாக தெரிவித்துள்ளார்
