YSR Congress Party: கூவி கூவி கோழி, குவாட்டர் வழங்கிய கட்சி நிர்வாகிகள்!

Advertisements

ஆந்திராவில்  கூவி கூவி  கோழி , குவாட்டர் வழங்கிய கட்சி நிர்வாகிகள்!

திருப்பதி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் ‘மாற்றி யோசி’ என வித்தியாசமாக தசரா பண்டிகை கொண்டாடி உள்ளனர்.

விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் தசரா பண்டிகையை கொண்டாடினர்.

அப்போது டொட்டி பாபு ஆனந்த் தெருவில் மேஜை போட்டு அதில் உயிருள்ள பிராய்லர் கறி கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார்.

பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவாட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். அவர் தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி மற்றும் குவாட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த கோழி, மது விவகாரம் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *