மாரிதாஸ் கைது பின்னணி: பாய்ந்த சீமான்.. தவெக-வை சாடிய NTK.!

Advertisements

வலதுசாரி அரசியல் விமர்சகரும் யூடியூபருமான மாரிதாஸ், தற்போதைய தவெக தலைமையிலான கூட்டணி அரசு மற்றும் முதல்வர் சி.ஜோசப் விஜய், பெண் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை அவதூறாக விமர்சித்துப் பதிவிட்டதாகக் கூறி, சென்னை சைபர் கிரைம் போலீசாரால் மதுரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரிதாஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நடவடிக்கையை வன்மையாகச் சாடியுள்ளார்.  அந்த வகையில் மாரிதாஸ் மீதான இந்த நடவடிக்கை தவெக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும்.

ஜனநாயக விரோதம்: மாரிதாஸின் கருத்துக்கள் அவதூறானவை என்று அரசு கருதினால், அதற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி, உரிய விசாரணை நடத்தி முறைப்படி வழக்குத் தொடர வேண்டுமே தவிர, எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாகக் கைது செய்வது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும்.

சீமானின் கேள்வி: “கொலையாளிகள், கொள்ளையர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது பாயாத போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கை, தங்களை விமர்சிக்கும் ஜனநாயக குரல்களுக்கு எதிராக, அரசை விமர்சிப்போர் மீது மட்டுமே பாய்கிறது” என சீமான் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் தவிர்த்து அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகளும் இந்த கைது நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

“புதிய அரசு மாற்றுக்கருத்துகளையும், விமர்சனங்களையும் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளத் தவறி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கேள்விகளை ஒடுக்க நினைக்கிறது” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.மறுபுறம், “விமர்சனம் என்ற பெயரில் பரப்பப்படும் அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும் சட்டப்படி ஒடுக்குவது அரசின் கடமை” என தவெக ஆதரவாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *