
ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அமெரிக்க-சீன உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் சான்பிரான்சிஸ்கோவில் சந்தித்த ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், போட்டி மோதலாக மாறுவதை தடுக்கும் முயற்சியில் தகவல் தொடர்புகளை மேமபடுத்த உறுதிமேற்கொண்டனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் திங்களன்று, நிலையான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார், இராஜதந்திர உறவுகளின் ஆண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் மேலோங்கியதுடன் 4-5 வது ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிட்ட செய்தி அறிக்கையில் “சீனா-அமெரிக்க உறவுகளின் நிலையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்த இரு தரப்பினரும் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.
“சீன-அமெரிக்க உறவுகளை தொடர்ந்து வழிநடத்தவும், சீனா மற்றும் அமெரிக்கா மற்றும் அவர்களின் மக்களுக்கு பயனளிக்கவும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அதிபர் பைடனுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தினார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நட்பு, மரியாதை, அமைதி போக்கு ஆகியவற்றை கடைப்பிடிப்பது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார். நட்புறவினால் இரு தரப்பிற்கும் சிறந்த உறவு மேம்படும் என்றும் தெரிவித்தார்.

