Advertisements

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
குஜராத் மாநிலம், வதோராவில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்தப், போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Advertisements



