நம்புற மாறி நாடகம் ஆடுவதில் கில்லாடி – விஜய்!

Advertisements

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

* நான் ஊருக்கும் வருவதற்கும், நமது த.வெ.க.வினர் நோட்டீஸ் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவது ஏன் எனத் தெரியவில்லை.

* உங்களின் வசதிக்காக மக்களோடு இருப்பதை போன்று நம்பும் வகையில் நீங்கள் நடத்தும் நாடகத்தைப் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

* நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர்.

* மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

* விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

* விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தைக் கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

* நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.

* ஏர்போர்ட் கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இங்க வேணாம்னுதான் சொல்கிறேன்.

* அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாமென முடிவெடுத்த தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை.

* பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *