Advertisements

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே நிதியுதவி வழங்கியிருந்த நிலையில், தான் அளித்த வாக்குறுதிப்படி தற்போது முதலமைச்சராக கரூர் செல்கிறார்.
நாளை (ஜூலை 10, 2026) கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், அந்த 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
Advertisements



