Trichy:ஹாஸ்டலில் காதலியுடன் உல்லாசமாக இருந்த காதலன்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

Advertisements

மகளிர் விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் வாலிபர் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகுகலை குறித்து தில்லைநகரில் உள்ள நிறுவனத்திற்கு சென்று படித்து வருகிறார். இதற்காக அந்தப் பெண் அங்குள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், வழக்கம்போல அந்தப் பெண் பயிற்சியை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினார்.

பின்னர் அறையில் தங்கி இருக்கும் தனது தோழியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அந்த அறையில் தாழ்ப்பாள் போடாமல் தோழி வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தபோது இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தவர் அவரது காதலன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *