Transport Workers: பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

Advertisements

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் எனப் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லையெனத் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *