
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் தலைமையில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ்-அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார்,
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரதசாகு, சட்டத்துறைச் செயலாளர் பி.சுமதி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


