Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 03.12.2023

Advertisements
ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
நினைத்தவாறே வீடு வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
உடல் நலம் தேறும்.

ரிசபம்

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
கோபத்தை தவிர்ப்பது நல்லது.
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

மிதுனம்

நீண்ட நாட்களாக இருந்த கழுத்து வலி நீங்கும்.
தேகம் பொலிவுறும்.
குடும்பத்தின் பெரியவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பு பாராட்டுவர்.

கடகம்

புதுமை படைக்கும் நாள்.
வியாபாரம் சுமாராக இருக்கும்.
நட்பால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.

 

சிம்மம்

மாணவர்கள் நன்கு படிப்பர்.
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

கன்னி

புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.

துலாம்

திருமணம் நிச்சயம் ஆகும்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

விருச்சிகம்

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.
உத்யோகஸ்தர்கள் பணியிடத்தில் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர்.

தனுசு

அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர்.
அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.

மகரம்

பெண்களை நன்கு மதிப்பர்.
உடல் உபாதை அதிகமிருக்கும். கவனம் தேவை.
உத்யோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள்.
உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
கணவன், மனைவி இணைந்து செயல்பட்டு குடும்ப நலனுக்கு பாடுபடுவர்.
பூர்வ சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும்.
வழக்குகளை இழுத்தடிக்காமல் சமரசமாக தீர்த்துக் கொள்வது நல்லது.

மீனம்

மாணவர்கள் படிப்பு, வேலையில் முன்னேறுவர்.
உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.
சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.
உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *