
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, செட்டிநாடு குழுமம், முதலமைச்சர் ஜோசப்விஜய்க்கு, ரூபாய் 3 கோடியை நன்கொடையாக வழங்கியது.
தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, செட்டிநாடு குழுமம் ரூபாய் 3 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை செட்டிநாடு குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் முத்தையா ராமசாமி, சென்னையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வழங்கினார். செட்டிநாடு குழுமத்தின் இந்த நிதிப் பங்களிப்பை முதலமைச்சர் நன்றி பாராட்டியதுடன், மாநிலத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு அந்தக் குழுமம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அங்கீகரித்தார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட செட்டிநாடு குழுமம், தனது பல்துறை வணிகங்கள் மற்றும் தேசக் கட்டமைப்பு, அறப்பணிகளுக்கான நீடித்த அர்ப்பணிப்பின் மூலம், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.



