நாங்கள் எந்த அழைப்பையும் விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கவில்லை – திருமா.!

Advertisements

தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து நாங்கள் எந்த அழைப்பையும் எதிர்பார்க்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஒரு கூட்டணி ஆட்சியைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை என்று தெரிவித்தார்.

நாங்கள் இன்னும் திமுக உடனே இருக்கிறோம் என்றும், நாங்கள் மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் என்றும் கூறினார். தமிழக மக்களின் நலனுக்காக இந்த கூட்டணியுடன் நாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்திடமிருந்து நாங்கள் எந்த அழைப்பையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *