பிரண்டையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது!

Advertisements

பிரண்டை என்றால் எலும்புகளை வலுப்படுத்தும் என்று பொருள். பிரண்டை என்பது ஒரு சிறப்பு மூலிகையாகும், இது எலும்புகளை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தாவரத்தில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் கார்பனேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இயற்கை நிறைய மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை நமக்குக் கொடையாக அளித்துள்ளது. அதில் இன்றியமையாத ஒன்று தான் பிரண்டை.
நகரத்தில் வசிக்கும் பலருக்கும், பிரண்டையின் நற்குணங்களை பற்றிச் சரியாகத் தெரியாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிரண்டையை பார்த்தது கூடக் கிடையாது.
கிராமத்தில் வீட்டு ஓரங்களில் உள்ள வேலிகளில் வைத்து வளர்க்கும் உணவுப்பொருள் தான் இந்தப் பிரண்டை.

டாக்டர். பிரியங்கா சிங் கூறியதாவது, பிரண்டை என்றால் எலும்புகளை வலுப்படுத்தும் என்று பொருள். பிரண்டை என்பது ஒரு சிறப்பு மூலிகையாகும், இது எலும்புகளை வலுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தாவரத்தில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் கார்பனேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே அவை உடைந்த எலும்புகளைக் குணப்படுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தில் இது ஆஸ்தி சம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது எலும்புகளை இணைக்கிறது என்று அர்த்தம். எலும்பு என்பது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும், இத்தகைய எலும்புகளை வலுப்படுத்தப் பிரண்டை உதவு புரிகிறது.

இது தவிர பிரண்டை ஆனது வயிறு உப்புசம், ஆஸ்துமா, வாயு பிடித்தல் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

உங்கள் எலும்புகள் பலவீனமாக இருந்தால், பிரண்டை சாப்பிட வேண்டும். இது உங்கள் எலும்புகளை மீண்டும் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.

மேலும், பலவீனமான எலும்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற கடுமையான பிரச்சனைகளைப் போக்க பிரண்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் டாக்டர் கூறியுள்ளார்.

மேலும் அது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

பிரண்டையில் உடலில் ஏற்படும் வலி மற்றும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றை சரி செய்யும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும், உடலில் எந்த இடத்திலும் வீக்கம் அல்லது வலி இருந்தால், இதைச் சாப்பிடுவதால் மிகவும் நன்மை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஏதேனும் ஒரு காரணத்தினால் வெட்டு அல்லது காயம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், பிரண்டை சாப்பிட வேண்டும். பிரண்டை சாப்பிடுவதால் இரத்தப்போக்கு படிப்படியாக நிறுத்தப்படும். ஏனெனில் இது இயற்கையாகவே இரத்த ஓட்டத்தைச் சீராக்க வேலை செய்கிறது.

இது தவிர உங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனையை இருந்து, அது படிப்படியாகத் தீவிரமடைந்திருந்ததால், பிரண்டை சாப்பிட வேண்டும். இது செரிமான அமைப்பைப் பலப்படுத்துகிறது மற்றும் உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.

பைல்ஸ், கீல்வாதம், வார்ம் டிசீஸ், மூக்கு மற்றும் காதுகளிலிருந்து இரத்தப்போக்கு, மலேரியா, ஆஸ்துமா மற்றும் மாதவிடாய் வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பிரண்டை மிகவும் நன்மை அளிக்கிறது.

பிரண்டையை இரண்டு கப் தண்ணீரில் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். ஒரு கப் தண்ணீர் வரும் வரை கொதிக்க வைக்கவும், பிறகு அதைக் குடிக்க வேண்டும். எப்படி தினமும் ஒரு முறை குடிக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *