
சங்கல்ப் சப்தா திட்டம் தொடக்கம்! Sankalp Saptaah
`சங்கல்ப் சப்தா’ திட்டமானது பிரதமர் மோடியால் தொகுதிகள் மேம்பாடு அடைய கொண்டு வரப்பட்டுள்ளது.
சங்கல்ப் சப்தா என்ற பெயரில், நாட்டில் உள்ள ஆர்வமுள்ள தொகுதிகளுக்கான தனித்துவமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டத்தைத் பிரதமர் மோடி தொடங்கியுள்ளார்.
ஒரு வாரகால திட்டமாகச் செயல்படும், இதனை மோடி டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.தொகுதி வாரியாக, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நிர்வாகத்தைச் செயல்படுத்தவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மொத்தமாக 329 மாவட்டங்களில் 500 லட்சியத் தொகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் இருந்து சுமார் 3000 பஞ்சாயத்து மற்றும் தொகுதி அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும் காணொளி மூலமும் பொது மக்களிடையே உரையாற்றினார்.



