இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா…. ஆட்களை தேர்வு செய்ய விளம்பரம் வெளியீடு!

இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் டெஸ்லா, சமீபத்தில் இந்திய சந்தையில் நுழைய ஆர்வம் காட்டியுள்ளது.

ஆனால், வரி விகிதம் காரணமாக, டெஸ்லா தனது திட்டங்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இதற்கான காரணமாக, மத்திய அரசு சமீபத்தில் கார்கள்மீதான சுங்க வரியை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு, எலான் மஸ்க், எக்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருடன் மோடி சந்திப்பு நடத்தினார்.

இந்தச் சூழலில், இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ‘லிங்க்ட் இன்’ தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐந்து வகையான பணிகளுக்கான தேர்வுகள் டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *