திருப்பதி:தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்யத் தகுதியான கைதிகள்குறித்த விவரங்களைப் பட்டியலிட்டு அளித்தனர்.
இந்தப் பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலிலிருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்தக் கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்குக் குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

