தில்லியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியும் இப்ராகிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் வீரர்களும் பங்கேற்கின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா உள்ளிட்டோர் பேட்டிங்கில் இப்போட்டியில் அதிரடியை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
இருபது கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இப்போட்டியில் யார் வெல்வார்கள் எனக் கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

