தமிழ்நாட்டில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உதவி ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1, 1 ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.
72 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு, 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
சென்னையில் 170 மையங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் எழுதினர்.
