
தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை முன்னிறுத்தி காங்கிரஸ் ஆடும் அரசியல் ஆட்டம், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி விட்டன. இது தொடர்பாக விளக்கமான செய்தியைப் பார்க்கலாம்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தவெகவுக்கு முதலில் கை கொடுத்தது காங்கிரஸ். இதற்கு என்ன காரணம் என்று கூறிய காங்கிரஸ் கட்சி,
இதுதொடர்பாக, திமுக எம்பி கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் “ மாறிவரும் அரசியல் சூழல்களின் காரணமாகவும், காங்கிரஸுடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாலும், அவையில் அவர்களுக்கு அருகில் அமர்வது சரியல்ல என குறிப்பிட்டுள்ளார்.
திமுக உறுப்பினர்கள் தங்களது கடமைகளை சரியாகச் செய்ய ஏதுவாக தனியாக அமரும் வசதி செய்து தரப்பட வேண்டும்” என கனிமொழி கடிதத்தில் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் ‘இண்டியா’ கூட்டணியை மீண்டும் பலப்படுத்த முயன்று வரும் வேளையில், இந்த விரிசல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்ததுடன், ஸ்டாலின் மற்றும் மம்தாவுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, “கடினமான காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள், “பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டிய நேரத்தில், கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் முரண்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, ஜார்கண்ட் ஹேமந்த் சோரன், டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் என பல்வேறு தலைவர்களுடன் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகத்தில் மதவாத சக்திகள் கால் பதிப்பதைத் தடுப்பதற்காகவே இந்த கருத்தியல் மாற்றம் என வெளியில் சொன்னாலும், உண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் நீண்ட நாட்களாகவே சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
மேலும், திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தர திமுக மறுப்பதாகவும் காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.இதன் விளைவாகத்தான் இந்த விலகல். மேலும் தமிழக அரசியலின் எதிர்காலம் இனி விஜய் தான் என்பதால் அவருடன் கூட்டணி அமைத்து, ஆட்சி, அதிகாரம் என சுகம் காணலாம் என காங்கிரஸ் கட்சியினர் விரும்புவதாக கூறப்படுகிறது.





