
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இவ்விவகாரம் சிபிசிஐடி விசாரணையில் இருப்பதாகவும், நாளாகி விட்டது என்பதால், இப்போது அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி நிராகரித்தார்.





