குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் – தமிழக அரசு உத்தரவு!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள்மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது.

பச்சரிசி, பாகுவெல்லம் அரைகிலோ, பாசிபருப்பு 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ளது.

கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் பரிசுத் தொகுப்பு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை செய்யத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *