ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு!

Advertisements

திருச்சி:

திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகளாகச் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இவை தவிர வெளிநாட்டு சேவைகளாகப் பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து ஐதராபாத் நோக்கித் தினமும் காலை 6 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்படுவது வழக்கம்.

இந்த விமானம் இன்று காலை ஐதராபாத் நோக்கிப் புறப்படுவதற்கு தயாரானது.

இதில் 120 பயணிகள் பயணம் செய்வதற்காகக் காத்திருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

எனினும் அதனைச் சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து அதில் பயணிகள் ஐதராபாத் செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மாற்று விமானம் ஆனது மதியம் 12.40 மணிக்குத் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *