Sivagangai : பல்வேறு திட்டப்பணிகள் இன்று தொடக்கம் – மு.க.ஸ்டாலின்.!

Advertisements

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கிறாா். சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மாகாந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா் ஜீவா ஆகியோா் சந்தித்து பேசியதன் நினைவாக, மூன்று கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.

இதைத்தொடா்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.

இதன் பின்னா், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட வீறுகவியரசா் உருவச் சிலையை திறந்து வைக்கிறாா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *