
ஒரு சிலர் கால்களில் உள்ள நகங்கள் நகத்தொற்று அல்லது நகச்சொத்தை என்று அழைக்கப்படும் பூஞ்சை தொற்று இருக்கும். இது கால் நகங்களை அதிக அளவில் பாதிக்கும்.
காரணங்கள்;
காலில் நகச்சொத்தை ஏற்படுவதற்கு அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது, வெறும் காலில் நடப்பது மற்றும் ஏற்கனவே நகச்சொத்தை உள்ளவர்களின் காலணிகளை பயன்படுத்துவதும் தான் காரணமாகின்றன. மேலும் நகங்களுக்கு நல்ல காற்றோட்டம் அவசியம்.
நகச்சொத்தைக்கு சிகிச்சையளிக்கப் பல தீர்வுகள் உள்ளன. கால் நகத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க டெர்பினாபைன், ப்ளூகோனசோல் போன்ற பல பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
வேபரப்;
வேபரப் பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க என்று உருவாக்கப்பட்டதில்லை. இது சளி, இருமல் மற்றும் மேல் சுவாசக் குழாயின் பிரச்சனைகளுக்கு உதவ தயாரிக்கப்பட்டது. ஆனால், இதில் உள்ள யூகலிப்டஸ் மற்றும் கற்பூரம் குளிர்ச்சியின் விளைவுகளை குறைக்க பயன்படும்.
அதனால் இவை கால் நகங்களில் உள்ள பூஞ்சைக்கு சிகிச்சையளிக்கும் என்று 2011-ல் நடந்த ஆய்வு கூறுகிறது. இந்த வேபரப்பை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். ரோஜா மொட்டுகளை டீயில் சேர்த்து குடித்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும்…
ஓசோனேட்டட் எண்ணெய்;
ஓசோனேட்டட் எண்ணெய்கள் என்பது பெரும்பாலும் ஆலிவ் எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் ஆகும். ஓசோனேட்டட் செய்யப்பட்ட இந்த எண்ணெயில் ஏதேனும் ஒரு எண்ணெயை நகச்சொத்தைக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை ஓசோனேட்டட் செய்யப்பட்ட எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால் போதும்.
கற்பூரவள்ளி எண்ணெய் (ஆர்கனோ ஆயில்);
பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மற்றொரு எண்ணெய் தான் கற்பூரவள்ளி எண்ணெய் என்று அழைக்கப்படும் ஆர்கனோ எண்ணெய். இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த கற்பூரவள்ளி எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவ வேண்டும்.
டீ ட்ரீ ஆயில்;
டீ ட்ரீ ஆயில் மற்றும் ஆர்கனோ எண்ணெய்யைக் கூட ஒன்றாகக் கலந்தும் தடவலாம். இருப்பினும், இந்த இரண்டு எண்ணெய்யும் சேர்ப்பதால் உங்களின் நகச்சொத்தையில் எரிச்சல் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வினிகர்;
கால் நகத் தொற்று நீக்க வினிகரை பயன்படுத்தலாம். வினிகர் ஒரு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வீட்டு வைத்தியம் ஆகும். பாதிக்கப்பட்ட காலின் பாதம் மற்றும் நகங்களை வினிகரில் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். வெதுவெதுப்பான நீரில் வினிகரைக் கலந்து இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
பூண்டு;
பூண்டு ஒரு இயற்கையான ஆன்டி பயாடிக் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். கடுமையான வாசனை கொண்ட பூண்டை நீங்கள் கால் நகத்தொற்றை போக்க பயன்படுத்தலாம். இதனுடைய வாசனையை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், பூண்டை சிறுசிறு துண்டுகளாக நசுக்கி பாதிக்கப்பட பகுதியில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை வைத்து கட்டி விடுங்கள்.
சத்தான உணவு;
கால் நகச்சொத்தை பூஞ்சையிலிருந்து விரைவாக மீண்டு விட முடியும். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்கும் புரதம் நிறைந்த உணவுகள், இரும்புச்சத்து நிறைந்த உணவு இறைச்சி, பீன்ஸ், கீரை போன்ற உணவுகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

