சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை!

சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாகத் திகழும் மெரினா கடற்கரை, மக்களைக் கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்குத் தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்குக் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

ஆண்டுக்குப் பல லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இந்தக் கடற்கரைக்கு இன்னமும் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0′ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாமென மாநகராட்சி அறிவித்துள்ளது. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *