ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு அமைப்பது ஏமாற்று வேலை – அன்புமணி!

Anbumani Ramadoss
Advertisements

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது,

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.

மத்திய அரசுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தத் திட்டத்தின்படி அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது என்பதால், அந்த முறையை மாற்றி விட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

எனவே, குழு அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு நேரடியாகச் செயல்படுத்த வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *