Senthil Balaji Bail: இன்று தீர்ப்பு!

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுமீது இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளிக்க உள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரும் 29ஆம் தேதிவரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமின் கோரிய வழக்கில் நீதிபதி அல்லி இன்று தீர்ப்பளிக்கிறார். காலை 11.30 மணியளவில் நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Senthil Balaji Bail

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *