பிரபல ஓட்டலில் கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்!

Advertisements

புதுச்சேரி:

மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுதும் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகள், தயாரிப்பு இடங்களின் சுகாதார முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.

இதில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன 3 கிலோ மாட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை அழித்தனர்.

இதுபோல் பஸ் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 5 உணவகங்களுக்கு அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கி, 20 உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *