Schools Open : குழந்தைகளை அன்போடு வரவேற்ற ஆசிரியர்கள்.!

Advertisements

தமிழகத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் முறைப்படி தொடங்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், இன்று காலை முதலே பள்ளி வளாகங்கள் அனைத்தும் மாணவ, மாணவிகளின் வருகையால் கலைகட்டத் தொடங்கின. புதிய வகுப்புகள், புதிய புத்தகங்கள், புதிய சீருடைகள் என ஒட்டுமொத்தப் பள்ளிகளும் புத்துணர்ச்சியோடு காட்சியளித்தன.

வழக்கமாக பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களிடம் காணப்படும் அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் அசத்தலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பள்ளி வாசலில் வண்ணமயமான தோரணங்கள் கட்டப்பட்டு, பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பள்ளிக்குள் நுழைந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், சந்தன திலகமிட்டும், ரோஜா மலர்களைக் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், அவர்களின் இனிப்பான பள்ளிப் பருவத் தொடக்கத்திற்கு வாழ்த்துகள் கூறி, சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினர்.

முன்னாள் மாணவர்களில் பெரும்பாலோர் தங்களது நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வகுப்பறைக்குள் சென்றனர். ஆனால், முதன்முறையாக எல்கேஜி (LKG) மற்றும் ஒன்றாம் வகுப்பில் சேருவதற்காக, பெற்றோரின் கைகளைப் பிடித்துக்கொண்டு வந்த குட்டிச் சுட்டிகள், தங்களது பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுது அடம் பிடித்த சுவாரசியமான காட்சிகளும் அரங்கேறின. அந்த மழலையர்களை ஆசிரியர்கள் தூக்கிக் கொஞ்சி, சாக்லேட் கொடுத்து தங்களின் பாசமான அரவணைப்பிற்குள் அழைத்துச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *