
சென்னை: வங்கியில் ரூ.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.29.50 லட்சம் மோசடி செய்ததாக பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வர் (48). நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய அலோசியஸ் (38) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஈஸ்வர் அவருக்கு பல தவணைகளாக ரூ.8.5 லட்சம் கொடுத்துள்ளார்.




