
பிரதமர் மோடியை கருநாக பாம்பு எனத் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை கருநாக பாம்பு எனத் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆவேசமாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற செய்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடிக்கு எதிராகப் போராடினார்கள்.
இதனால் அரசு 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மோடியை வற்புறுத்தினார்கள்.
இந்தச் சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்கமாட்டார். அவர் கருநாகம் போன்றவர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி விவசாயிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களில் வெற்றி பெற நினைக்கிறார்.அதுபோல் நடந்தால் விவசாயிகளைக் கடிக்க மோடி மீண்டும் வருவார்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் மந்திரியின் இந்த விமர்சனம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


