Advertisements

உலகிலேயே அதிக அளவில் கள்ளக்காதல் நடைபெறும் நாடு இந்தியா என்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் அதிர்ச்சி தரும் சர்வே தகவல் வெளியாகி உள்ளது . ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன் வாழும் இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது .
தினசரி பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் கள்ளக்காதல் விவகாரங்களால் கணவன் தலை மீது கல்லை போட்டு கொன்ற மனைவி தலையை தனியாக துண்டித்த கணவன் என விதம் விதமான செய்திகளை இப்போது பார்க்க முடிகிறது . ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சமீப காலமாக கள்ளக்காதலில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஷ்லே என்ற அமைப்பும் யூ கவ் என்ற அமைப்பும் தனித்தனியாக உலகளாவிய கள்ளக் காதல் குறித்து ரகசிய சர்வே செய்துள்ளனர் . இதில் உலகிலேயே இந்தியாவில் தான் கள்ளக்காதல் அதிகமாக இருக்கிறது என நம்பர் ஒன் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது
இந்தியாவில் சராசரியாக 23 சதவீத கள்ளக்காதல் நடமாடுவதாக தெரியவந்துள்ளது . இது மட்டுமல்லாமல் இந்திய ஆண்களில் 53 சதவீதம் பேர் கள்ளக்காதலுக்கு ஆசைப்படுவதாகவும் ஆனால் அது நிறைவேறாமல் தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது . இதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது .
இந்தியாவைப் பொருத்தமட்டில் கள்ளக்காதல் அதிகமாக நடமாடும் நகரமாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் தேர்வாகியுள்ளது . மக்கள் தொகை நெருக்கத்தின் அடிப்படையில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் காஞ்சிபுரத்தில் தான்அதிக அளவு கள்ளக்காதல் நடமாடுவதாக அந்த அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரத்தில் கள்ளக்காதல்கள் பெருகிய வண்ணம் இருக்கின்றன. இது தவிர இந்தியாவில் டெல்லியை சுற்றிலும் உள்ள தென்மேற்கு டெல்லி கிழக்கு டெல்லி தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி வடமேற்கு டெல்லி ஆகிய நகரங்களிலும் கள்ளக்காதல் அதிக அளவில் இருக்கிறது
இதேபோல் ஜெய்ப்பூர் சண்டிகார் ஆகிய நகரங்களிலும் கள்ளக்காதல் பெருகிய வண்ணம் இருக்கின்றன என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன . ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது கள்ளக்காதலில் நம்பர் ஒன் இடத்தை பெற்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements



