POCSO Act: கெஞ்சியும் கேட்க்காமல் மாணவியைக் மாறி மாறிக் கற்பழித்த கும்பல்!

Advertisements

11-ம் வகுப்புப் பள்ளி மாணவியைக் கடத்தி சென்று 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போலப் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மாணவிக்கு அறிமுகமான 2 பேர் நானும் உங்க வீட்டு வழியாகதான் செல்வதாகக் கூறி அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அந்த மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்தப் பள்ளி மாணவி எவ்வளவு கெஞ்சியும் விடாமல் 5 பேர் கொண்ட கும்பல் மாறி மாறிக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த மாணவியிடம் இது தொடர்பாக வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.

உடனே இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் சென்று நடந்த சம்பவம்குறித்து கதறியபடி அந்த மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *