இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்!

Advertisements

சென்னை:

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,

பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்துகுறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ளப் பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளப் பதிவு அலுவலகங்களைக் காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *