டாஸ்மாக் கடைகள் விடுமுறை – அரசு உத்தரவு!

Advertisements

சென்னை: 

Advertisements

வரும் ஜனவரி 15ம் தேதிதிருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினம் ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜனவரி 15ம் தேதிதிருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினம் ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசுத் தினம் ஆகிய இரண்டு தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *