Advertisements

என் மூச்சுக்காற்று இருக்கும்வரை பதவியை அன்புமணிக்கு தரமாட்டேன் என்றும் கூறியுள்ளார் . சமீப காலமாகவே பாமகவில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் பிரச்சனைகள் நடந்து வருகின்றன . அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அவருடைய மகன் மகன் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு இடையே பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன .
சென்னை தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தாக தெரிவித்தார்.
ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்த்து மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க போவது இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisements



