வினாத்தாள் கசிந்தால் 10 ஆண்டு ஜெயில்..மத்திய அரசு அதிரடி புதிய மசோதா.!

Advertisements

வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் விதிக்க, புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதேவேளை, வினாத்தாள் கசிவை தடுக்க ஏற்கனவே உள்ள சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுத்தேர்வுகளில், தவறான வழிகளை தடுப்பதற்கான சட்டம்-2024ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், வினாத்தாள் கசிவு, தேர்வுகளில் தவறான வழியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்டால் ரூபாய் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேபோல், வினாத்தாள் கசிவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூபாய் 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

இந்த சட்டத்திருத்தம், மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *