பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வருத்தம்.!

Advertisements

பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது, தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று, வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக,  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அவர் வதந்தி வேண்டாம் என்றும், எப்போதும் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *