
புதுடில்லி: ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டில்லியில் ஜி -20 உச்சி மாநாட்டுக்காக மறு வடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ) அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) திறந்து வைத்து நாட்டு அர்ப்பணித்தார். இதற்கான சிறப்பு பூஜையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.பின்னர் அரங்கை வடிவமைத்த கலைஞர்களுக்குச் சால்வை அணிவித்து பாராட்டினார் !

