பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர்!

Advertisements

ராமேசுவரம்:

பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு பழமையான பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால், பழைய பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலியூடாக அடிக்கல் நாட்டினார். இந்தப் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் காரணமாக, கடந்த 26 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, மண்டபம்வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன, தற்போது மண்டபத்திலிருந்து பராமரிப்பு பணிகளுக்காகப் பயணிகள் இல்லாமல் காலி ரயில் இயக்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *