
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இன்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிப்பீர்கள் என முன்னாள் துணை முதல்வரும், ஜங்கபுரா தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான மணீஷ் சிசோடியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மணீஷ் சிசோடியா கூறியது,
டெல்லியில் மிகப்பெரிய அளவிலான மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். ஆம் ஆத்மி கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பதை தற்போது கூறுவது கடினம்.
மக்களிடம் இருக்கும் உற்சாகத்தை பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வசதியான நிலையோடு ஆட்சியைப் பிடிக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்ற சூழ்நிலை டெல்லியில் நிலவுகிறது.
