கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக வேண்டும் மக்கள் விரும்புகிறார்கள் – மணீஷ் சிசோடியா!

Advertisements

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இன்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிப்பீர்கள் என முன்னாள் துணை முதல்வரும், ஜங்கபுரா தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான மணீஷ் சிசோடியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மணீஷ் சிசோடியா கூறியது,

டெல்லியில் மிகப்பெரிய அளவிலான மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். ஆம் ஆத்மி கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பதை தற்போது கூறுவது கடினம்.

மக்களிடம் இருக்கும் உற்சாகத்தை பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வசதியான நிலையோடு ஆட்சியைப் பிடிக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்ற சூழ்நிலை டெல்லியில் நிலவுகிறது.

8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது தேர்தலுக்கு முந்தைய அறிவிப்பு என மக்களுக்குத் தெரியும். பின்னர் இது தேர்தலுக்கான தந்திரம் அல்லது ஐந்து வருடத்திற்குப் பிறகு அமல்படுத்துவோம் என அவர்கள் சொல்லமாட்டார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

இவ்வாறு மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *