Paris Olympics; இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

Advertisements

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்திப் பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தகுதி சுற்றின் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறினார்.

இதையடுத்து தகுதி சுற்றின் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *