பாக்கிஸ்தான் எம்.பி ஒருவர், நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று அழுத வீடியோ வைரல் ..!

Advertisements

இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில், அந்நாட்டு எம்.பி ஒருவர், நாங்கள் தவறு செய்துவிட்டோம், கடவுளே எங்களுக்கு கருணை காட்டு என கதறி அழுத வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.காஷ்மீரின் பெகல்காமில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 26 பேரை கொன்றனர்.இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது.

இந்த நிலையில், எல்லைப் பகுதியல் பாகிஸ்தான் அத்துமீறி பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. மே 8ம் தேதி இரவு முழுவதும் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே கடும் தாக்குதல் நடந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தானில் அந்நாட்டு எம்.பி ஒருவர் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், அல்லாஹ் நம்மை காப்பார். உலகில் எங்கு பார்த்தாலும் நாம் பின்தங்கி இருக்கிறோம், நாங்கள் தவறு செய்துவிட்டோம், ஆனால் கடவுளே நாங்கள் உங்களின் ஆதரவாளர்கள். கடவுளே எங்கள் மீது கருணை காட்டு எனக் கூறி கதறி அழுகிறார்.இந்த வீடியோவை பார்க்கும்போது, தவறு செய்துவிட்டு பின்னர் கதறி அழுவதில் என்ன பயன் இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றும். தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததாலேயே பாகிஸ்தான் இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *