
இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடியை நம் நாடு கொடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. பாகிஸ்தான் நம்மிடம் இப்படி அடி வாங்கினாலும் கூட அந்த நாட்டின் நெருங்கிய நட்பு நாடான சீனா இன்னும் உதவிக்கு செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நம் ராணுவம் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
இதன் தொடர்ச்சியாக இன்று பாகிஸ்தானின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள், ரேடார் அமைப்புகள், வான்வெளி பாதுகாப்புக்கான சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஏவுகணை, ட்ரோன் மூலம் அடித்து நொறுக்கி உள்ளது நம் நாடு.
இப்படி பாகிஸ்தான் நம்மிடம் அடி வாங்கினாலும் கூட அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா இன்னும் உதவிக்கு செல்லவில்லை. குறிப்பாக பாகிஸ்தானும், சீனாவும் ராணுவம், வர்த்தகம் உள்பட பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் தான் சீனாவிடம் இருந்து அதிகப்படியான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் சுமார் 80 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
மாறாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் கவலையளிக்கிறது. இருநாடுகளும் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்று மட்டுமே சீனா சொல்லி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கவில்லை. இப்போது சிலருக்கு ஒரு சந்தேகம் வரலால். டொனல்ட் டிரம்ப் தான் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 145 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக குறைப்பதாக கூறியுள்ளாரே. இந்த வரியை குறைத்தால் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செல்லுமே என்ற கேள்வி உதிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் டொனால்ட் டிரம்பை நம்ப முடியாது. அவர் எப்போது எந்த முடிவை எடுக்கிறார் என்பது புரியாத விஷயமாகும்.
