
ஆப்ரேஷன் சிந்துர் எப்படி நடந்தது..? தாக்குதல் பற்றிய முழு பின்னணி பற்றி பார்க்கலாம்..!
ஏப்ரல் 22ம் தேதியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்று ஜம்மு காஷ்மீரில் பெகல்காம் பககுதியிலிருந்த அப்பாவி சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் 26 பேரை சுற்றுக்கொண்டனர். இதனால் நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூலமென்று எதிர் பார்க்கப்பட்டது. அதை இந்தியா எப்படி கையாளப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. நாம் ஒன்று பாகிஸ்தான் கிடையாது. அந்நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் அங்குள்ள தீவிவரவாதிகள் இருப்பிடங்கள் ஏவுகனைகளளக் கொண்டே தாக்கினோம் அதை பற்றித்தான் பார்க்கபோகிறோம்.
ஜம்மு & காஷ்மீர் பெகல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ நடத்தியுள்ளது இந்தியா. இந்த ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா. இந்த ஒன்பது இடங்களில் ஜெய்ஷ்- இ- முகமது, லஷ்கர் -இ- தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்றட தீவிரவாத அமைப்புகளாகும்..இந்த ஒன்பது இடங்களும் கடந்த காலங்களில் இந்தியா மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்புடையது. அதோடு இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் உள்நுழைய அதிகம் முயற்சிக்கும் இடங்களாகும். இதை வைத்து இந்திய ராணுவம் -பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அந்த இடங்கள் பஹவல்பூர் இது பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருப்பதாகும். இது ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதக் குழுவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவர் மசூத் அசார். 2001-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் நடந்த பாராளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் போன்ற முக்கிய தாக்குதல்கள் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டதாகும். அடுத்த இடம் முரிட்கே. இது லாகூர் அருகில் இருக்கிறது.
இது லஷ்கர் -இ -தொய்பா அமைப்பின் முகாமாகும். இந்த இடத்தில் தீவிரவாத பயிற்சி கூடம், ஆயுதக் கூடம், ஆயுத போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது. இந்த அமைப்புக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2008ல் மும்பை தாக்குதலுக்கு சம்பந்தம் இருக்கிறது என்று இந்திய அரசால் நம்மப்படுகிறது.மற்றொரு இடம் மெஹ்மூனா. இது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இடமாகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த அமைப்பு எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை தான்.
ஆனால், தீவிரவாதப் பயிற்சிகள் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.இன்னொரு இடம் கோட்லி . இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. இங்கே தற்கொலை படையினர், கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றன. கோட்லியில் எந்த நேரத்திலும் 50 பேருக்கு பயிற்சிகள் வழங்க முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன.மற்ற இடங்கள் குல்பூர், சவாய், சர்ஜால், பர்னாலா ஆகிய இடங்களும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இடங்களிலும் தீவிரவாதப் பயிற்சி, தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு போன்றவை நடைபெற்று வந்தது தான் இதற்கான காரணம்.
இந்த ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானின் ராணுவப் பகுதி எதுவுமே தாக்கப்படவில்லை அதோடு பாகிஸ்தான் பொது மக்கள் மீதும் இல்லை என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியா நடத்திய இந்தத் தாக்குதல் முழுக்க முழுக்க இந்திய மண்ணில் இருந்துதான் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள்ளோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றோ இந்தத் தாக்குதலை நடத்தவில்லை. அப்புறம் எப்படி இந்த துல்லிய தாக்குதல்கள் சாத்தியம் என்ற கேள்வி எழலாம். இதை இந்திய ராணுவம் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. அவற்றின் விவரம் இதோ.
ஸ்கால்ப் இது வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும். சுமார் 250 கி.லோ மீட்டக்கும் அதிகமான தூரத்திற்குச் சென்று துல்லிய தாக்குதல் நடத்தும் ஏவுகணை இதுலாய்ட்டரிங் முனிஷன் இது ஒரு வகை டிரோன் ஆகும். இது குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வட்டமடித்துத் தாக்குதல் நடத்தும். இது தானாகவும் இயங்கும் இல்லை மனிதர்கள் மூலமும் இயக்கலாம்.ஹேமர். இது ஒரு ஸ்மார்ட் வெடிகுண்டாகும். இந்த வெடிகுண்டு பதுங்கு குழிகள், கடினமான உள்கட்டமைப்பைக் கொண்ட கட்டடங்கள் போன்றவற்றைத் தாக்கும் வல்லமை கொண்டது. இது 50 முதல்- 70 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சென்று தாக்கும்.
இப்படிதான் ஆப்ரேஷன் சிந்துர் நடத்தி முடித்திருக்கிறது. இதை வைத்து பாகிஸ்தான் நம் மீது போர் தொடக்க முடியாத அளவுக்கு அறிவு பூர்வமாக நடத்தி முடித்திருக்கிறோம்.. இப்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் கடும் வறுமையில் திண்டாடுகிறது. அது நம் மீது போர் தொடுத்தால் பாகிஸ்தான் நாட்டில் பஞசம் தலைவிரித்தாடும் இதனால் பாகிஸ்தான் ராணுவதற்கு எதிராக கூட கலவரமாகவே வெடிக்கலாம்.
