ஆபரேஷன் சிந்தூர் – எம்.பி.க்கள் குழு இன்று உலக நாடுகளுக்கு புறப்பட்டது!

Advertisements
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க, முதல் எம்.பி.க்கள் குழு இன்று உலக நாடுகளுக்கு புறப்பட்டது.

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில், 9 பேர் கொண்ட முதல் எம்.பி.க்கள் குழு தனது பயணத்தை தொடங்கியுள்ளது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த குழு ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் நிலைபாடு குறித்து விளக்கம் அளிக்கிறது. மேலும், கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு, நாளை ரஷியா புறப்பட்டு செல்கிறது. இந்த குழு அங்கிருந்து ஸ்பெயின், கிரீஸ், லாத்வியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. கனிமொழி எம்.பி., இடம் பெற்ற இந்த குழு பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 2-ந்தேதி நாடு திரும்புகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *