
கெய்ரோ:
உலகின் பழமையான நாகரிகங்களில் எகிப்திய நாகரிகம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அங்கு மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படும் சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கட்டமைப்பில், நைல் நதியின் அருகில் உள்ள தீப்ஸ் மலைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒரு பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்தபோது, கி.மு.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் துட்மோஸ் என்ற மன்னரின் கல்லறையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லறை கண்டுபிடிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
